Connect with us

IPL 2024 : பெயர் குழப்பத்தால் ஏலத்தில் வீரரை மாற்றி எடுத்த பஞ்சாப் அணி..!!

IPL 2024

IPL 2024 : பெயர் குழப்பத்தால் ஏலத்தில் வீரரை மாற்றி எடுத்த பஞ்சாப் அணி..!!

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கும் வீரர்களை நேற்று மினி ஏலம் மூலம் 10 அணிகளும் எடுக்கப்பட்ட நிலையில் பெயர் குழப்பத்தால் பஞ்சாப் அணி ஏலத்தில் வீரரை மாற்றி எடுத்துள்ள சம்பவம் சற்று சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

துபாயில் நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மினி ஏலம் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது . இந்த ஏலத்தில் தங்கள் அணிக்கு தேவையான பல இளம் வீரர்களை 10 அணிகளும் போட்டி போட்டுகொண்டு ஏலத்தில் எடுத்து.

இதில் ஆஸ்திரேலியா அணியின் இரு வீரர்கள் ஐபிஎல் வரலாற்றின் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர் . ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் படைத்த சில நிமிடங்களிலேயே அதனை உடைத்து புதிய வரலாறு படைத்துள்ளார் சக அணி வீரான மிட்செல் ஸ்டார்க். ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது . பாட் கம்மின்ஸை ரூ.20.5 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது .

இந்நிலையில் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் 19 வயதான ஷஷான்க் சிங் என்ற வீரரை வாங்குவதற்கு பதிலாக 32 வயதான ஷஷான்க் சிங் என்ற வீரரை ஏலத்தில் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள பஞ்சாப் அணி கூறியதாவது :

ஒரே பெயரில் 2 வீரர்கள் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது . எங்கள் அணியில் அவர் இடம் பெற்றிருப்பதை நாங்கள் மகிழ்ச்சியாக கருதுகிறோம். எங்கள் வெற்றிக்கு அவர் பங்களிப்பதை பார்க்க விரும்புகிறோம் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  PBKS VS RR : பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு..!!

More in IPL 2024

To Top