Connect with us

PBKS VS RR : பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு..!!

Featured

PBKS VS RR : பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்றுகள் நெருங்கி வரும் நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் அசாம் மாநிலத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 65 ஆவது லீக் போட்டியில் PBKS – RR அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து ராஜஸ்தான் அணியை ரன் குவிக்க விடாமல் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பஞ்சாப் அணி பந்துவீச உள்ளது.

நடப்பு தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி உள்ள சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 8 போட்டியில் வெற்றி பெற்று 4 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 2 ஆவது இடத்தில் உள்ளது .

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி உள்ள சாம் க்ரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் 4 போட்டியில் வெற்றி பெற்று 8 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் உள்ளது.

இதில் கடைசி இடத்தை பிடித்துள்ள பஞ்சாப் அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ள நிலையில் ராஜஸ்தான் அணியுடன் இன்று களம் காண உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அசாமில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top