Connect with us

“கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை உடைத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்” – டேவிட் வார்னர்

CWC23

“கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை உடைத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்” – டேவிட் வார்னர்

உலககோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை உடைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஏரளாமான ரசிகர்களுடன் நேற்று முன்தினம் நவ19 ஆம் தேதி விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்றது.

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சற்று மந்தமாக ஆடியதால் 240 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது . இதையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அபாரமாக ஆடி 6 வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.

இந்திய அணியின் இந்த தோல்வியை ஏற்கமுடியாமல் கடும் கோபத்தில் இருந்த ரசிகரக்ள் இந்திய அணியையும் ஆஸ்திரேலியா அணியையும் வசைபாடி வருகின்றனர்.

இந்நிலையில் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை உடைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

என இந்திய ரசிகர் ஒருவரின் ஆதங்க பதிவிற்கு, பதிலளித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கூறியதாவது :

“கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை உடைத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்”
இந்திய அணி உடனான இறுதி போட்டியில் விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது இது மிகச்சிறந்த ஆட்டமாக இருந்தது. இங்குள்ள ரசிகர் சூழல் நம்பமுடியாத அளவில் இருந்தது. இந்தியா மிகத்தீவிரமாக இந்த தொடரை நடத்தியது. அனைவருக்கும் நன்றி என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியிடும் ‘புஷ்பா -2’ படக்குழு - இப்போ என்ன அப்டேட் தெரியுமா..?

More in CWC23

To Top