Connect with us

ட்ரஸிங் ரூமில் கதறிய இந்திய வீரர்களை ஆறுதல் கூறி மனம் தேற்றிய பிரதமர் மோடி – வைரல் போட்டோஸ்

CWC23

ட்ரஸிங் ரூமில் கதறிய இந்திய வீரர்களை ஆறுதல் கூறி மனம் தேற்றிய பிரதமர் மோடி – வைரல் போட்டோஸ்

உலககோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்த சோகத்தில் இந்திய அணி வீரர்கள் கண்ணீர் விட்டு அழும் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வைரலாக வலம் வருகிறது .அதேபோல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் ட்ரஸிங் ரூமில் கதறிய இந்திய வீரர்களை ஆறுதல் கூறி மனம் தேற்றிய பிரதமர் மோடியின் புகைப்படங்களும் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஏரளாமான ரசிகர்களுடன் நேற்று விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்றது.

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சற்று மந்தமாக ஆடியதால் 240 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது . இதையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அபாரமாக ஆடி 6 வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.

இந்நிலையில் உலககோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்த சோகத்தில் இந்திய அணி வீரர்கள் கண்ணீர் விட்டு அழும் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வைரலாக வலம் வருகிறது .

அதேபோல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் ட்ரஸிங் ரூமில் கதறிய இந்திய வீரர்களை ஆறுதல் கூறி மனம் தேற்றிய பிரதமர் மோடியின் புகைப்படங்களும் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி கூறிருப்பதாவது :

“நீங்கள் சிறப்பாக விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். நாங்கள் இன்றும், என்றும் எப்போதும் உங்களுடன் நிற்போம்” என இந்திய அணிக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கஞ்சாவின் தலைநகரமாக மாறிய தமிழகம் - அரசு மீது காட்டம் தெரிவித்த அண்ணாமலை..!!!

More in CWC23

To Top