Connect with us

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் உருக்கமான பதிவு..!

Featured

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் உருக்கமான பதிவு..!

மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரம் முழுவதும் வெள்ளம் சூழந்துள்ள நிலையில் சென்னை மக்களுக்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் போட்டுள்ள பதிவு அனைவரையும் கவர்ந்து வருகிறது.

மிக்ஜாம் புயலால் பெய்து கனமழையில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் பெரு வெள்ளம் சூழ்ந்தது இதனால் அடிப்படை தேவைகளை கூற பெற முடியாமல் பொதுமக்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் கனமழை தற்போது மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளதால் சீரமைக்கும் பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுல இந்த சீரமைப்பு பணியில் பல்லாயிரக்கணக்கானோர் முழு வீச்சில் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

சென்னையின் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் மேடான பகுதிக்கு செல்லுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதே முக்கியம்
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுங்கள் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

அயல் நாட்டு வீரராக இருந்தாலும் சென்னை மக்களுக்காக பேசியுள்ள டேவிட் வார்னருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிவகார்த்திகேயன் தயாரிக்கும் குரங்கு பெடல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!!

More in Featured

To Top