Connect with us

நெல்லை, தூத்துக்குடி மக்களை சந்திக்கும் தளபதி விஜய்! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி!

Cinema News

நெல்லை, தூத்துக்குடி மக்களை சந்திக்கும் தளபதி விஜய்! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி!

சமீபத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது நெல்லை உட்பட நான்கு மாவட்டங்களிலும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது என்பதும் தமிழக அரசு உரிய மீட்பு பணி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை உட்பட நான்கு மாவட்ட மக்களுக்கு பலர் நிவாரண உதவி செய்து வரும் நிலையில் தளபதி விஜய் இன்று நிவாரண உதவி செய்வதற்காக நெல்லை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்க இருப்பதாக விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நெல்லையில் உள்ள கேடிசி நகரில் உள்ள மாதா மஹாலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு 400க்கும் மேற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நிவாரண உதவியை விஜய் நேரில் வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இழிவான முறையில் பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி - செல்வப்பெருந்தகை விமர்சனம்

More in Cinema News

To Top