Connect with us

இது என்னங்க பகல் கொள்ளையா இருக்கு : உலககோப்பை இறுதி போட்டியை முன்னிட்டு அகமதாபாத்தில் தங்கும் அறைகளின் வாடகை உயர்வு..!!

CWC23

இது என்னங்க பகல் கொள்ளையா இருக்கு : உலககோப்பை இறுதி போட்டியை முன்னிட்டு அகமதாபாத்தில் தங்கும் அறைகளின் வாடகை உயர்வு..!!

இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலககோப்பை இறுதி போட்டியை முன்னிட்டு அகமதாபாத்தில் உள்ள அனைத்து விடுதிகளில் உள்ள தங்கும் அறைகளின் வாடகை கடுமையாக உயர்ந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டி நாளை மறுநாள் கோலாகலமாக நடைபெற உள்ளது . உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஏரளாமான கலை நிகழ்ச்சிகளுடன் இந்த இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளது.

இந்நிலையில் உலககோப்பை இறுதி போட்டி நடைபெறும் அகமதாபாத்தில் உள்ள அனைத்து விடுதிகளில் உள்ள தங்கும் அறைகளின் வாடகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுமட்டுமின்றி விமான டிக்கெட்டுகளின் விலையும் உயர்ந்துள்ளதால் ரசிகர்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர்.

அகமதாபாத்தில் வழக்கமாக 10,000 – 15,000 வாடகையுள்ள விடுதி அறைகள் 45,000- 50,000க்கும், 35,000 – 50,000 வாடகையுள்ள அறைகள் 1 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

அதிகபட்சமாக டெல்லி – அகமதாபாத் மார்க்கத்தில் செல்லும் விமானங்களின் கட்டணமும் 400% அதிகரிக்கப்பட்டுள்ளதால் இது நியாயமே கிடையாது . இது பகல் கொள்ளை என ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  முதல் முறை தனது முதல் காதல் குறித்து மனம்திறந்த நடிகை லாஸ்லியா..!!

More in CWC23

To Top