Connect with us

பஞ்சாப் கொடுத்த எளிய இலக்கை அசால்டாக கடந்தது ராஜஸ்தான் – முகம் வாடிப்போன preeti zinta

Featured

பஞ்சாப் கொடுத்த எளிய இலக்கை அசால்டாக கடந்தது ராஜஸ்தான் – முகம் வாடிப்போன preeti zinta

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியை ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் சண்டிகரில் உள்ள உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெற்ற போட்டியில் PBKS – RR அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது .

அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் அதர்வா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க . இன்னொரு புறம் ஜானி பாரிஸ்டோவும் சொற்பர் ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் 10 ரன்கள், சாம் குரன் 6 ரன்கள், ஷஷாங்க் சிங் 3 , ஜிதேஷ் சர்மா 29, என 20 ஓவர்களில் 147 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணி எடுத்தது .

இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க வீரர்களாக இளம் புலி ஜெய்ஸ்வால் மற்றும் tanush களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுக்க ஜெய்ஸ்வால் 39 ரன்களிலும் tanush 24 ரங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த வீரர்கள் மெல்ல மெல்ல அடிக்க ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருந்ததது இருப்பினும் எளிய இலக்கு என்பதால் ராஜஸ்தான் அணி அதனை எளிமையாக கடந்துவிட்டது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இறுதி நேரத்தில் செய்த சிறு தவறு - டெல்லியிடம் பரிதாபமாக வீழ்ந்தது குஜராத்..!!

More in Featured

To Top