Connect with us

ஐபிஎல் மாதிரியான போட்டிகளால் 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்துவதில் சிக்கல்

Champions Trophy

Sports

ஐபிஎல் மாதிரியான போட்டிகளால் 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்துவதில் சிக்கல்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பரம எதிரியான இந்தியாவை வீழ்த்தி 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சாம்பியன்ஸ் பட்டம் வென்ற பிறகு முதல் முறையாக அடுத்த ஆண்டு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி நடக்க உள்ளது.

போட்டிகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் சில நாடுகளில் ஐபிஎல் மாதிரியான டி20 லீக் போட்டிகள் நடக்க உள்ளதால் போட்டியை நடத்துவதில் ஐசிசி சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

இந்த பிரச்சினை விரைவில் அல்லது பின்னர் தீர்க்கப்படும் என்றாலும், டி20 லீக்குகளை நடத்தும் கிரிக்கெட் வாரியங்கள் அடுத்த ஆண்டு தங்கள் டி20 லீக் போட்டிகளை திட்டமிடுவதில் நிறைய தலைவலியைக் கொண்டுள்ளன.

சாம்பியன்ஸ் டிராபியின் அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் இந்த போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ 20, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் சர்வதேச லீக் டி20, வங்கதேசத்தில் நடக்கும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் நாடான பாகிஸ்தானில் நடக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆகியவற்றிற்கு சிக்கலை ஏற்படுத்தும்.

மேலும் இந்த போட்டிகள் முக்கூட்டியே திட்டமிடப்பட்டால், அது பிக் பாஷ் லீக்கிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எப்படி இருப்பினும், பல்வேறு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் லீக் கிரிக்கெட் தொடர்களை வேறு சமயத்திற்கு மாற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால், இந்தியாவின் ஐபிஎல் மார்ச் இறுதியில் தான் தொடங்கும் என்பதால் அதற்கு எந்த சிக்கலும் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடக்க உள்ள நிலையில் அதில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணிக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அது சாம்பியன்ஸ் டிராபிக்கு மிகப்பெரிய சிக்கலை கொடுக்கும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சொந்த மண்ணில் மீண்டெழுமா லக்னோ..? மும்பை அணியுடன் இன்று பலப்பரீட்சை..!!

More in Sports

To Top