Connect with us

அத்தனை கேமரா முன் நிக்சன் பேசியது போல் நானும் சிலவற்றை பேச வேண்டும் – பிக் பாஸ் வீட்டில் பகீர் கிளப்பிய கண்ணம்மா

Bigg Boss Tamil Season 7

அத்தனை கேமரா முன் நிக்சன் பேசியது போல் நானும் சிலவற்றை பேச வேண்டும் – பிக் பாஸ் வீட்டில் பகீர் கிளப்பிய கண்ணம்மா

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பல போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வர தொடங்கியுள்ளனர்.

இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மத்தியில் இன்னும் ஒரு நல்ல உறவு ஏற்படாமலே இருந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது .

இந்நிலையில் கடந்த சீசன்களை போல் இந்த முறையும் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வர தொடங்கியுள்ளனர் . அதில் முதலாவதாக அனன்யா பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். இதையடுத்து தற்போது வினுஷாவும் அக்சயாவும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவில் வினுஷாவும் அக்சயாவும் பிக் பாஸ் வீட்டுக்குள என்ட்ரி கொடுக்க அவர்களை மாயா மற்றும் அர்ச்சனா அன்போடு வரவேற்க்கின்றனர்.

இதையடுத்து வினுஷாவிடம் நிக்சன் தம்பி பேசினாரா என்று தினேஷ் கேட்க ஆம் எனக்கு பின் பண்ணி பேசினான் அவன் என்று வினுஷா பதில் கொடுத்தார் .

உடனே அவன் என்ன சொன்னான் எல்லாம் ஓகே தான என்று தினேஷ் கேட்க அத்தனை கேமரா முன் நிக்சன் பேசியது போல் நானும் சிலவற்றை கேமரா முன் பேச வேண்டும் என பகீர் கிளப்பும் வங்கியில் வினுஷா பேச ப்ரோமோவும் அப்டியே முடிகிறது .

பிக் பாஸ் வீட்டில் நெடு நீங்க நாட்களாக பேசப்பட்டு வந்த பிரச்சனைகளில் இதுவும் ஒன்று . இந்நிலையில் பரபரப்பான கட்டத்தில் வினுஷா என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் இந்த பிரச்சனைக்கு இவராவது முற்று புள்ளி வைப்பாரா என நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top