Connect with us

12 லட்சமாக மாறிய பணப்பெட்டியின் மதிப்பு! பெட்டியை யார் எடுக்கப்போகிறார்?! Viral Promo!

Bigg Boss Tamil Season 7

12 லட்சமாக மாறிய பணப்பெட்டியின் மதிப்பு! பெட்டியை யார் எடுக்கப்போகிறார்?! Viral Promo!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டுள்ள நிலையில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஒரு போட்டியாளர் வெளியேறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணப்பெட்டியின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

முதல் நாள் ஒரு லட்சமாக இருந்த பணப்பெட்டியின் மதிப்பு நேற்று 9 லட்சம் ஆக உயர்ந்த நிலையில் தற்போது அது 12 லட்சம் ஆக மதிப்பு உயர்ந்துள்ளது. இதனை அடுத்து போட்டியாளர்கள் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு செல்லலாமா? என்று யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.

குறிப்பாக மாயா மற்றும் பூர்ணிமா இது குறித்து ஆழ்ந்த யோசனை செய்கின்றனர். பணப்பெட்டியை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசனையாக இருக்கிறது என்று பூர்ணிமா கூற, எடுப்பது பெஸ்ட் சாய்ஸ் தான் என்று மாயா கூறுகிறார். இதை வைத்து பார்க்கும் போது பூர்ணிமா பணப்பெட்டியை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் விஷ்ணு, மணி மற்றும் தினேஷ் ஆகிய மூவரும் பணப்பெட்டியை எடுக்கும் ஐடியாவில் இல்லை என்பது இன்றைய புரமோவில் இருந்து தெரிகிறது. அப்படி என்றால் மாயா குரூப்பில் உள்ள ஒருவர்தான் பணப்பெட்டியை எடுப்பாரோ என்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு தோன்றி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  RR பந்துகளை தெறிக்கவிட்ட நிதிஷ் - ராஜஸ்தான் அணிக்கு 202 ரன்கள் இலக்கு..!!!

More in Bigg Boss Tamil Season 7

To Top