Connect with us

ஆனந்த கண்ணீரில் RCB ரசிகர்கள் – டெல்லியை வீழ்த்தி WPL கோப்பையை வென்றது RCB மகளிர் அணி..!!

Featured

ஆனந்த கண்ணீரில் RCB ரசிகர்கள் – டெல்லியை வீழ்த்தி WPL கோப்பையை வென்றது RCB மகளிர் அணி..!!

நடப்பாண்டுக்கான WPL கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்திய RCB அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் WPL கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி டெல்லியில் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது .

இந்த போட்டியில் டெல்லி அணியும் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது . இதில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கிய டெல்லி அணியின் வீராங்கனைகள் ஆரம்பத்தில் அதிரடியில் மிரட்டனர் .

ஆனால் ஒரு ஓவர்களில் டெல்லியின் அதிரடி படிப்படியாக குறைய பந்துவீச்சை முழு திறனையும் வெளிப்படுத்தியது பெங்களூரு அணி. ஒரு கட்டத்தில் ஒரு கட்டத்தில் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே டெல்லி அணி எடுத்து .

இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆர்சிபி அணி களம் கண்டது . பொறுப்புடன் பொறுமையாக விளையாடிய பெங்களூரு அணி எனத வித பதற்றமும் இன்றி ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றனர் .

கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 5 ரன்கள் தேவை பட்ட நிலையில் . முதல் இரண்டு பந்துகளில் ரிச்சா கோஷ் மற்றும் பெர்ரி என இருவரும் ஒற்றை ரன் எடுக்க மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரிச்சா அணியின் வெற்றியை உறுதி செய்தார் .

இதையடுத்து இந்தப் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆர்சிபி அணி முதல் நுரையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது.

ஆர்சிபி அணியின் இந்த வரலாற்று வெற்றியை தற்போது உலகம் முழுவதும் உள்ள ஆர்சிபி அணி ரசிகர்கள் ஆனந்த கண்ணீருடன் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உலககின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று குஜராத்தை வீழ்த்துமா பெங்களூரு..? டாஸ் வென்ற RCB பந்துவீச முடிவு ..!!

More in Featured

To Top