Connect with us

“சொருகிடுவேன்னு சொன்னியாமே..! வேட்டையாடு விளையாடு DCP Raghavan போல நிக்சனை விசாரித்த கமல்!”

Bigg Boss Tamil Season 7

“சொருகிடுவேன்னு சொன்னியாமே..! வேட்டையாடு விளையாடு DCP Raghavan போல நிக்சனை விசாரித்த கமல்!”

பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரவென சென்று கொண்டிருக்கிறது. கலாட்டா கல்லூரி டாஸ்க்கில் டீச்சரான அர்ச்சனா, பிக்பாஸ் வீட்டில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்ற தலைப்பின் கீழ் பாடம் எடுத்தார். அப்போது பூர்ணிமா, மாயா, நிக்சன், விசித்ரா ஆகியோர் ஒரே கேங் என்று கூறி, தனித்தனியாக ஒவ்வொருவரையும் விமர்சனம் செய்தார்.

இதனையடுத்து பேச வந்த நிக்சன் அர்ச்சனாவை டார்கெட் செய்து, விசித்ரா உடனான உறவில், முகத்திற்கு முன்னால் ஒன்று பேசி விட்டு, கமல் சாரிடம் வேறு மாதிரியாக பேசுவதாக கூறினார். இதைக்கேட்டு டென்ஷனான அர்ச்சனா நிக்சனை நேராக அணுகி, நான் எப்போது அப்படியெல்லாம் நடந்து கொண்டேன் என்று கேட்டார். அதற்கு நிக்சன் விளக்கம் கொடுக்க, அதற்கு எதிராக அர்ச்சனா பேச, விளக்கம் சண்டையில் சென்று முடிந்தது.

அதனைத்தொடர்ந்து வந்த இன்னொரு பஞ்சாயத்தில் நிக்சனும், அர்ச்சனாவும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். அப்போது வினுஷாவை நிக்சன் உடல்ரீதியாக கமெண்ட் அடித்ததை குறிப்பிட்டு, பேசினார். இதைக்கேட்டு டென்ஷனான நிக்சன் எல்லை மீறி முஞ்சிய பாரு நாயே.. சொருவிறுவேன் என்று காட்டமாக பேசினர். அவரது பேச்சு கடுமையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், இந்த விவகாரம், கமல் முன்னால் வந்திருக்கிறது. அப்போது கமல் நிக்சன் சொருவிறுவேன் என்று சொன்னீர்களே, எங்கே சொருவுவீர்கள் என்று பேசி வேட்டையாடு விளையாடு படத்தில் கண்ணை விரித்து காண்பிப்பது போல காண்பித்தார். மேலும் கோபமாக பேசிய கமல் நீங்கள் எங்கே சொருவுவீர்கள் என்பது இப்போது எனக்கு தெரிந்தாக வேண்டும் என்று கூறி ஸ்ரைக் கார்டை காண்பித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top