Connect with us

போர் முடிந்துவிடும், தலைவர்கள் கைக்குலுக்குவர் ஆனால்.. ஆண்ட்ரியாவின் உருக்கம்

Featured

போர் முடிந்துவிடும், தலைவர்கள் கைக்குலுக்குவர் ஆனால்.. ஆண்ட்ரியாவின் உருக்கம்

நடிகை ஆண்ட்ரியா, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் தனது சிறந்த நடிப்பால் பெரும் கவனம் பெற்றார். அதன் பிறகு, ‘வடசென்னை’, ‘அரண்மனை’, ‘விஸ்வரூபம்’ போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

நடிகையாக மட்டுமல்லாமல், பின்னணி பாடகியாகவும் சிறந்து விளங்கும் ஆண்ட்ரியாவுக்கு, பல லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
பலர் இதற்கு ஆதரவு தெரிவிக்க, சிலர் எதிர்மறை கருத்துகளையும் பகிர்ந்துவருகின்றனர். இந்த சூழலில், நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உணர்வுப்பூர்வமான பதிவை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது:
“போர் முடிவடையும். தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள்.
தாய் தனது தியாக மகனுக்காகக் காத்திருப்பாள்.
பெண் தனது அன்பான கணவருக்காகக் காத்திருப்பாள்.”
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  6 கிலோ தங்க நகைகள், 156 கிலோ வெள்ளி! நடிகர் பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு..

More in Featured

To Top