Connect with us

நமது நாட்டில் வெறுப்பு அதிகமாகிவிட்டது – மேடையில் மனமுறுகிய நடிகர் விஷ்ணு விஷால்

Cinema News

நமது நாட்டில் வெறுப்பு அதிகமாகிவிட்டது – மேடையில் மனமுறுகிய நடிகர் விஷ்ணு விஷால்

நம் நாட்டில் இந்த வெறுப்பு அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் அதிகமாக இருக்கிறது என ‘லால் சலாம்’ நடிகர் விஷ்ணு விஷால் உருக்கமாக பேசியுள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் லால் சலாம் . இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடைத்துளள்னர் .

தனது மகளின் ஆசைக்காக மொய்தீன் பாய் எனும் கவுரவ கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்துள்ளார் . இதுமட்டுமின்றி இந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில் தேவ்வும் நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் படு பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியானது.

அதிரடியான ஆக்சன் காட்சிகளுடன் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இன்று இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் படத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்று உரையாற்றினார் அப்போது பேசிய நடிகர் விஷ்ணு விஷால் கூறியதாவது :

“நம் ஒவ்வொருவர் இடையே கொள்கைகள் மாறலாம். கருத்துகள் மாறலாம். அதற்கு மரியாதை கொடுப்பதுதானே மனிதம். பிடிக்கவில்லை என்பதால் அவர்களை தாழ்த்திப் பேசக் கூடாது.

நம் நாட்டில் இந்த வெறுப்பு அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் அதிகமாக இருக்கிறது” என நடிகர் விஷ்ணு விஷால் மனமுருக பேசியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  போறபோக்கில் கேஸ் போட்ட சமூக ஆர்வலர் - சர்ச்சையில் சிக்கிய விக்ரமின் ‘வீர தீர சூரன்’ திரைப்படம்..!!

More in Cinema News

To Top