Connect with us

பட்டாசு வெடிக்கும்போது பரிதாபமாக உயிரிழந்த சிறுமி – ஆறுதல் கரம் நீட்டிய தமிழக முதல்வர்..!!

Featured

பட்டாசு வெடிக்கும்போது பரிதாபமாக உயிரிழந்த சிறுமி – ஆறுதல் கரம் நீட்டிய தமிழக முதல்வர்..!!

இராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார் .

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதி, திமிரி ஒன்றியம். மாம்பாக்கம் ஊராட்சியில் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் சிறுமி நவிஷ்கா உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

பட்டாசு வெடி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 3 இலட்சம் ரூபாயும், இந்த விபத்தின் போது பலத்த காயமடைந்த விக்னேஷ் என்பவருக்கு 1 இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது ஏற்பட்ட விபத்து மற்றும் அவசர உதவிகளுக்குத் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 364 அழைப்புகள் வந்துள்ளதாக தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது .

இதில், 47 உள் நோயாளிகளும் 622 புற நோயாளிகளும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது . சென்னையில் மட்டும் 102 பட்டாசு விபத்து தொடர்பான அழைப்புகளும், பிற தீ விபத்து தொடர்பாக 9 அழைப்புகளும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

More in Featured

To Top