Connect with us

போடு தகிட தகிட – ‘தனி ஒருவன்’ திரைப்படத்திற்கு 6 பிரிவுகளில் விருது..!!

Cinema News

போடு தகிட தகிட – ‘தனி ஒருவன்’ திரைப்படத்திற்கு 6 பிரிவுகளில் விருது..!!

ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தனி ஒருவன் படத்திற்கு தமிழக அரசியின் திரைப்பட விருதுகளின் பட்டியலில் 6 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது.

கார்த்திக் ராஜா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தனி ஒருவன். ஜெயம் ரவி நயன்தாரா அரவிந்த் சாமி கணேஷ் தம்பி ராமையா உள்பட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில், 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த திரைப்படங்கள், நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளபட பல பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டிள்ளது .

இதில் தனி ஒருவன் திரைப்படத்திற்கு சுமார் 6 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த படம், சிறந்த வில்லன், சிறந்த கதையாசிரியர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த திரைப்பட தொகுப்பாளர், சிறந்த நடன ஆசிரியர் ஆகிய பிரிவுகளில் தனி ஒருவன் படத்திற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே படத்திற்கு இந்த விருதுகள் கிடைத்துள்ளதால் தனிஒருவன் படக்குழு தற்போது குஷியில் குத்தாட்டம் போட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி வென்ற Purple Cap - மாறி மாறி அன்பை பரிமாறிக்கொண்ட நட்டு மற்றும் அவரது மகள்

More in Cinema News

To Top