Connect with us

தலைவருடன் படம் பண்ணு!” – லோகேஷிடம் முதல் நபராக கூறிய தளபதி விஜய்..

Featured

தலைவருடன் படம் பண்ணு!” – லோகேஷிடம் முதல் நபராக கூறிய தளபதி விஜய்..

இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், தற்போது ‘கூலி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் நாகர்ஜுனா, ஷோபின் ஷபீர், உபேந்திரா, சத்யராஜ், மற்றும் ஸ்ருதி ஹாசன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார்.

அதில் அவர் ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:
“மாஸ்டர் படப்பிடிப்பு நேரத்தில் தளபதி விஜய் அண்ணா, ‘தலைவருக்கு ஒரு படம் பண்ணு’ன்னு என்னிடம் சொன்னார். அதற்கு ‘கண்டிப்பா பண்ணனும் அண்ணா’ன்னு நான் சொன்னேன். ‘கூலி’ படம் நடைபெறும்போது, முதல்நாளாகவே என்னை ஃபோன் செய்து வாழ்த்தியது விஜய் அண்ணாதான்.” என லோகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டூரிஸ்ட் பேமிலி படத்தில் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டது மம்பட்டியான் பாடல் – என கூறும் தியாகராஜன்..

More in Featured

To Top