Connect with us

“சென்னையை சூழ்ந்த பெரு வெள்ளம்” பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காக பெரிய தொகை வழங்கிய சூர்யா, கார்த்தி..!!

Cinema News

“சென்னையை சூழ்ந்த பெரு வெள்ளம்” பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காக பெரிய தொகை வழங்கிய சூர்யா, கார்த்தி..!!

மிக்ஜாம் புயல் செய்த சிறப்பான தரமான சம்பவத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி . மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் தற்போது சென்னை மாநகரமே தண்ணீரில் மூழ்கி உள்ளது .

மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் சூழந்த வெள்ளத்தால் அடிப்படை தேவைகளை கூற பெற முடியாமல் தற்போது பொதுமக்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இந்நிலையில் கனமழை தற்போது மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளதால் சீரமைக்கும் பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் அடிப்படை தேவைகளை செய்வதற்காக சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் 10 லட்சம் ருபாய் தருவதாக அறிவித்து உள்ளனர். அவர்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக இந்த நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மழை வெள்ளத்தால் இதுவரை எந்த ஒரு திரை பிரபலங்களும் உதவ முன்வராத நிலையில் தற்போது முதல் ஆளாக சூர்யா மற்றும் கார்த்தி உதவ முன்வந்துள்ளது மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் சங்க கட்டடப் பணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதி உதவி..!!!

More in Cinema News

To Top