Connect with us

மதுபோதையில் நடந்த விபரீதம்.. கடைசி விவசாயி படத்தில் நடித்த மூதாட்டி அடித்துக்கொலை

Kadaisi_Vivasayi_Kasammal_Murder

Cinema News

மதுபோதையில் நடந்த விபரீதம்.. கடைசி விவசாயி படத்தில் நடித்த மூதாட்டி அடித்துக்கொலை

கடைசி விவசாயி படத்தில் நடித்த மூதாட்டி, மதுகுடிக்க பணம் தராததால் தனது மகனால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் 2022இல் வெளியான கடைசி விவசாயி படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் அத்தையாக காசம்மாள் என்ற மூதாட்டி நடித்திருந்தார். இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த ஆனையூரைச் சேர்ந்தவர் ஆவார்.

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், 52 வயது மூத்த மகனான நமக்கொடி கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து தாயுடன் வசித்து வந்துள்ளார். மேலும், மனைவியை பிரிந்த பிறகு குடிக்கு அடிமையாகியுள்ளார். இதனால் வீட்டில் தினமும் தாயுடன் சண்டை போட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை மூன்று மணியளவில் காசம்மாளை எழுப்பி மது குடிக்க பணம் கேட்டு நமக்கொடி சண்டை போட்டுள்ளார். காசம்மாள் பணம் தர மறுத்த நிலையில், சண்டை முற்றி நமக்கொடி தாயை பலமாகத் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த காசம்மாள் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு புகார் தெரிவித்ததை அடுத்து அவர்கள் வந்து சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நமக்கொடியையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் மது போதைக்காக பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பல வருடங்களுக்கு பின் புதிய படத்தில் மீண்டும் இணையும் சூர்யா – ஜோதிகா – வெளியான முக்கிய அப்டேட்..!!!

More in Cinema News

To Top