Connect with us

கடைசி விவசாயி படத்தின் இயக்குனர் வீட்டில் கொள்ளை.. தேசிய விருதையும் திருடிச் சென்ற அவலம்

Kadaisi_Vivasayi_Director_Manikandan

Cinema News

கடைசி விவசாயி படத்தின் இயக்குனர் வீட்டில் கொள்ளை.. தேசிய விருதையும் திருடிச் சென்ற அவலம்

கடைசி விவசாயி படத்தை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது தேசிய விருதுகளும் திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காக்கா முட்டை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மணிகண்டன் கடைசியாக கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கி இருந்தார். விஜய் சேதுபதி நடித்த இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருதையும் வென்றது.

இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ளது. இந்நிலையில் படவேலைகள் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக இவர் குடும்பத்துடன் சென்னையில் தங்கி உள்ளார்.

இந்நிலையில், உசிலம்பட்டியில் உள்ள அவரது வீட்டை மணிகண்டனின் ஓட்டுநர்கள் ஜெயக்குமார், நரேஷ்குமார் ஆகியோர் பராமரித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் அவர்கள் மணிகண்டனின் வீட்டிற்கு சென்றபோது கதவு திறந்து கிடந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறை சோதனை செய்ததில் ரூ.1 லட்சம் பணம், 5 சவரன் தங்க நகை மற்றும் கடைசி விவசாயி படத்துக்காக வாங்கிய 2 தேசிய விருது பதக்கங்களையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  போறபோக்கில் கேஸ் போட்ட சமூக ஆர்வலர் - சர்ச்சையில் சிக்கிய விக்ரமின் ‘வீர தீர சூரன்’ திரைப்படம்..!!

More in Cinema News

To Top