Connect with us

தமிழகத்தை அச்சுறுத்தி வரும் ஜேஎன்1 கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுத்திடுக – சரத்குமார் வலியுறுத்தல்

Cinema News

தமிழகத்தை அச்சுறுத்தி வரும் ஜேஎன்1 கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுத்திடுக – சரத்குமார் வலியுறுத்தல்

தமிழகத்தை தற்போது அச்சுறுத்தி வரும் ஜேஎன்1 என்ற புதியவகை கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

ஜேஎன்1 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உலகமெங்கும் வேகமாக பரவி வரும் நிலையில் , தமிழ்நாட்டில் இந்த புதிய வகை தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டதாகவும், கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப்பட்ட 34 பேரில் 3 பேர் உயிரிழந்ததாகவும் வெளிவரும் செய்திகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஜேஎன்1 வைரஸின் வீரியம் குறைவுதான் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதை தண்டி உயிரிழப்புகள் மிகக்குறைவாக ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், உலக சுகாதார அமைப்பு கொரோனா பரவல் குறித்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தியதை கருத்தில் கொண்டு, கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவ துறையினர் தயார் நிலையில் இருப்பது அவசியம்.

தமிழக அரசும் அஜாக்கிரதையாக இருக்காமல் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வேகப்படுத்தி , தமிழ்நாட்டில் ஜேஎன்1 கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திட வேண்டும் என சரத்குமார் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அட்டகாசமான ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது மம்மூட்டியின் ‘டர்போ’ படத்தின் ட்ரெய்லர்..!!

More in Cinema News

To Top