Connect with us

மத்திய அரசு வழங்கிய உயரிய விருதுகளை திருப்பியளிக்கிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்..!!

Featured

மத்திய அரசு வழங்கிய உயரிய விருதுகளை திருப்பியளிக்கிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்..!!

மத்திய அரசு வழங்கிய கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை திருப்பி அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவளரான சஞ்சய் சிங் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர்கள் பலரும் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சஞ்சய் சிங்கின் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீராங பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதினை மோடியின் வீட்டு வாசலில் வைத்துவிட்டு சென்றார் . இந்நிலையில் மத்திய அரசு வழங்கிய உயரிய விருதான அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா விருதுகளை திருப்பியளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் வினேஷ் போகத் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது :

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு கலைந்து வருகிறது, ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துடன் வாழ விரும்புவர். ஆனால் அப்படி வாழும் வாழ்க்கைக்கு விருதுகள் சுமையாகிவிடக்கூடாது என மிகவும் உருக்கமான கடிதத்தை பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் இன்று முடிவுக்கு வரும் நாளை முடிவுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் இருக்க இருக்க இன்னும் பெரிதாகிக்கொண்டே செல்வதால் இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு சுமக்க முடிவு கொடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Serial நடிகை கேபி அழகிய போட்டோஷூட் Viral..

More in Featured

To Top