Connect with us

புதிதாக உருவான ஃபெஞ்சல் புயல் – லேட்டஸ்ட் தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்..!!

Featured

புதிதாக உருவான ஃபெஞ்சல் புயல் – லேட்டஸ்ட் தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்..!!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல், நாளை பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ள உள்ள நிலையில் புயலின் தற்போதைய நிலை குறித்த லேட்டஸ்ட் தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயலால் வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 80 கி.மீ வேகம் வரை காற்று வீசலாம்

கட்டுமானத் தளங்களில் உள்ள உயர் கிரேன்கள், விளம்பர பதாகைகளை பாதுகாப்பாக கீழே இறக்க உத்தரவு

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரையில் பொதுமக்கள் கூடவும், குளிக்கவும் தடை விதிப்பு

சென்னையில் உள்ள பூங்காக்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . காற்றின் வேகத்திற்கு ஏற்ப ரயில் சேவையில் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top