Connect with us

மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் மரணம்…மூச்சுத்திணறலால் நடந்த சோகம்!

Cinema News

மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் மரணம்…மூச்சுத்திணறலால் நடந்த சோகம்!

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என வரிசையாக மூன்று ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்திருப்பவர் மாரி செல்வராஜ்…இவருக்கு அடுத்ததாக வாழை,துருவ் விக்ரமின் படம் அடுத்து தனுஷின் படம் என லிஸ்டில் இருக்கின்றது…

இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் மாரி முத்து…30 வயதாகும் மாரிமுத்து கர்ணன் மற்றும் மாமன்னன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்..தொடர்ந்து படங்களில் வேலை செய்தும் வருகின்றார்…

இந்த நிலையில் மாரிமுத்து மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது…தூத்துக்குடி மாவட்டம் – திருப்புளியங்குடி என்கிற கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு இருந்து வந்துள்ளார் இவர் தனியாக படம் இயக்க கதையும் தயார் செய்து வந்ததாக கூறப்படுகிறது…அதன் வேலைகள் நடந்து வந்ததாகவும் தெரிகின்றது…

மறைந்த மாரிமுத்துவுக்கு ஷீபா என்கிற பெண்ணுடன் திருமணமாகி இவர்களுக்கு 5 வயதில் சாமுவேல் என்கிற மகனும் இருக்கிறார்….இவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்து இருக்கின்றது,அளவுக்கு அதிகமாக சிகரெட் பிடித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கிறது…அதனால் உயிரிழந்ததாக தெரிகின்றது..இது திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  போறபோக்கில் கேஸ் போட்ட சமூக ஆர்வலர் - சர்ச்சையில் சிக்கிய விக்ரமின் ‘வீர தீர சூரன்’ திரைப்படம்..!!

More in Cinema News

To Top