Connect with us

நடிகர் மன்சூர் அலி கான் மீது மகளிர் ஆணையம் எடுத்த அதிரடி நடவடிக்கை…மன்னிப்பு கேட்காமல் மறைந்து இருக்கும் மன்சூர்!

Cinema News

நடிகர் மன்சூர் அலி கான் மீது மகளிர் ஆணையம் எடுத்த அதிரடி நடவடிக்கை…மன்னிப்பு கேட்காமல் மறைந்து இருக்கும் மன்சூர்!

இப்போது அதிகமாக பேசப்பட்டு வருவது மன்சூர் பேசிய விஷயம் தான்,நேற்று முன்தினம் நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து மிகவும் மோசமான வகையில் பேசினார். இந்த விஷயம் வைரலாகி பின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…அனைவரும் இதனை மோசமாக விமர்சித்து இருந்தனர் இவரின் இந்த செயலுக்கு கேஸ் கூட கொடுக்கப்படும் என சொல்லப்படுகின்றது…

இது நடிகை திரிஷாவிற்கு கவனத்திற்கு செல்ல மன்சூர் அலிகானை வன்மையாக கண்டித்து அவர் பதிவு ஒன்றை வெளியிட்டார்…இதன்பின் லோகேஷ் கனகராஜ்,கார்த்திக் சுப்ராஜ், சின்மயி, குஷ்பூ, சாந்தனு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் மன்சூர் அலிகானுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்…இவருக்கு எல்லாம் வாய்ப்பே தரக்கூடாது அவரை மன்னிக்கவும் கூடாது..

மேலும் நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர் இதில் நடிகர் மன்சூர் அலிகான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.ஆனால் மன்சூர் அலிகான் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை…அவர் என்ன முடிவில் இருக்கின்றார் என இதுவரை அவர் சொல்லவும் இல்லை அவர் சரியாக இல்லை என்றால் ரெட் கார்டு கொடுக்கவும் நேரிடும் என தெரிகின்றது..

இந்நிலையில், இந்திய தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்த இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.இந்த வழக்கில் IPC 509B மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது…அதனால் அவர் மன்னிப்பு கேட்டு இதனை சரி செய்வாரா இல்லை உள்ளே சென்று விடுவாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘ரிவால்வர் ரீட்டா’ படப்பிடிப்பு நிறைவு..!!

More in Cinema News

To Top