Connect with us

ஐபிஎல் மெகா ஏலத்தில் பலமடங்கு சம்பள உயர்வு பெற்ற ஜித்தேஷ் சர்மா..!!

Featured

ஐபிஎல் மெகா ஏலத்தில் பலமடங்கு சம்பள உயர்வு பெற்ற ஜித்தேஷ் சர்மா..!!

கடந்த ஐபிஎல் தொடரில் அடிப்படை விலைக்கு ஏலம் போன ஜித்தேஷ் சர்மா இன்றைய ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் பல மடங்கு சம்பள உயர்வு பெற்றுள்ளது அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது.

2025 ஐபில் தொடருக்கான மெகா ஏலம் சவுதியில் நடைபெற்று வந்த நிலையில் இம்முறை இந்த மெகா ஏலத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடைபெற்றுள்ளன அதில் பல வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போயுள்ளனர்.

அந்தவகையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சுமார் 5500% சம்பள உயர்வு பெற்று, அதிக சம்பள உயர்வு பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் பெங்களூரு அணியின் ஜித்தேஷ் சர்மா.

பண்ட்டும், ஸ்ரேயாஸூம் அதிக விலைக்கு ஏலம் போனாலும் கடந்த முறை வாங்கிய ஊதியத்தை ஒப்பிடுகையில் அவர்களின் சம்பள உயர்வு ஜித்தேஷ் சர்மாவை விட மிகக் குறைவு. 20 லட்சம் ஊதியம் பெற்று வந்த ஜித்தேஷை 11 கோடிக்கு RCB அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடுத்தவர்களுக்கு வழி விடுவது முக்கியம்! பிரியங்கா பற்றி திவ்யதர்ஷினியின் கருத்து..

More in Featured

To Top