Connect with us

போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பா..? இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை திடீர் சோதனை..!!!

Cinema News

போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பா..? இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை திடீர் சோதனை..!!!

இந்தியாவை உலுக்கிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் சிக்கியுள்ள நிலையில் தற்போது அவருடன் சேர்ந்து படம் பண்ணிய இயக்குனரும் நடிகருமான அமீர் அலுவலகத்தில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவான ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் இந்தியாவை உலுக்கிய மாபெரும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் கைதாகி தற்போது டெல்லி சிறையில் அடைபட்டுள்ளார்.

இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் குறித்து ஜாபர் சாதிக்கிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பல கட்ட விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போதை பொருள் வழக்கு குறித்து விசாரிக்க இயக்குனர் அமீருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில் டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குநர் அமீர் ஆஜர் ஆனார்.

இந்நிலையில் இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள இயக்குநர் அமீரின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஈடன் கார்டனில் வாணவேடிக்கை நடத்திய கொல்கத்தா அணி - பஞ்சாப் அணிக்கு 262 ரன்கள் இலக்கு..!!

More in Cinema News

To Top