Connect with us

மிக்ஜாம் புயல் பாதிப்பு : முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 15 லட்சம் வழங்கிய டிமான்டி காலனி 2 படக்குழு..!!

Cinema News

மிக்ஜாம் புயல் பாதிப்பு : முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 15 லட்சம் வழங்கிய டிமான்டி காலனி 2 படக்குழு..!!

​​​​​​மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளால் கடும் அவதிக்குள்ளான மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு டிமான்டி காலனி 2 படக்குழு ரூ.15 லட்சம் வழங்கியுள்ளது.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது . புயல் ஓய்ந்து இத்தனை நாட்கள் ஆனாலும் தற்போது வரை இன்னும் சில பகுதிகளில் வெள்ளம் வடியாமலே இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காக்கவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய திரை பிரபலங்கள் பலர் களத்தில் இறங்கியுள்ள நிலையில் பல உச்ச நட்சத்திரங்கள் தங்களால் முடிந்த தொகையினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது ​​​​​மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளால் கடும் அவதிக்குள்ளான மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு டிமான்டி காலனி 2 படக்குழு ரூ.15 லட்சம் வழங்கியுள்ளது.

நடிகரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று நேரில் சந்தித்த டிமான்டி காலனி 2 படக்குழு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் வழங்கியுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி-2’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெயில் தாங்க முடியாத 300 யூனிட் மின்சாரம் இலவசமாக தாருங்கள் - வானதி சீனிவாசன் கோரிக்கை

More in Cinema News

To Top