Connect with us

கொளுத்தும் வெயிலில் பந்துவீச்சில் அசத்திய சென்னை அணி – ராஜஸ்தான் அணி 141 ரன்கள் குவிப்பு..!!

Featured

கொளுத்தும் வெயிலில் பந்துவீச்சில் அசத்திய சென்னை அணி – ராஜஸ்தான் அணி 141 ரன்கள் குவிப்பு..!!

பரபரப்பான கட்டத்தை எட்டி வரும் நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 142 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் தொடரின் 61 ஆவது லீக் போட்டியில் CSK – RR அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார் . இதையடுத்து ராஜஸ்தான் அணியின் ரன் குவிப்பை தடுக்கும் வகையில் சென்னை அணி பந்து வீசியது.

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினர் . இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

பின்னர் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் வெளியேற முடிந்த வரை போராடிய ரியான் பராக் 47 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 141 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது சென்னை அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  50 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் சூரியின் கருடன் - விஸ்வரூப வெற்றியை கேக் வெட்டிக்கொண்டாடிய படக்குழு..!!

More in Featured

To Top