Connect with us

10 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸாகும் பாகுபலி – ரசிகர்கள் உற்சாகம்!

Featured

10 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸாகும் பாகுபலி – ரசிகர்கள் உற்சாகம்!

இந்திய சினிமாவில் புதுப் பரிணாமத்தை உருவாக்கிய படம் பாகுபலி. இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ராணா, தமன்னா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

முதல் பாகம் பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து, இரண்டாம் பாகம் அதைவிட மூன்று மடங்கு வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பெரும் சாதனை படைத்தது. இப்போது, பாகுபலி முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதை ஒட்டி, இந்தப் படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் அக்டோபர் மாதம் பாகுபலி ரீ-ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த செய்தி தற்போது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நாஞ்சில் விஜயனுக்கு குழந்தை பிறந்தது! பாசம் நிறைந்த கண்ணீர்…

More in Featured

To Top