Connect with us

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று கேப்டன் விஜயகாந்த் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் – அண்ணாமலை

Featured

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று கேப்டன் விஜயகாந்த் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் – அண்ணாமலை

அனைவரின் அன்புக்கும் உரித்தான கேப்டன் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று, மக்கள் பணி தொடர இறைவனை வேண்டுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே உயர் சிகிச்சை பெற்று வருகிறார் எடுத்துவருகிறார். அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்றும் உயர்தர மருத்துவ பரிசோதனைகளையும் விஜயகாந்த் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில்கடந்த 18ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மார்புசளி, இடைவிடாத இருமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு தீவிர நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்றும் அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை விடுத்துள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

அனைவரின் அன்புக்கும் உரித்தான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று, மக்கள் பணி தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஈடன் கார்டனில் இன்று வெற்றிநடை போடப்போவது யார்..? கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்..!!

More in Featured

To Top