Connect with us

நடிகர் தனுஷுக்கு வந்த புதிய சிக்கல் – களத்தில் இறங்கிய காவல்துறை

Cinema News

நடிகர் தனுஷுக்கு வந்த புதிய சிக்கல் – களத்தில் இறங்கிய காவல்துறை

இந்திய சினிமவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்ணிட்டு வெளியான படம் தான் கேப்டன் மில்லர்.

ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை இப்படம் வசூலில் பட்டய கிளப்பியதாக திரை துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் நடிகர் தனுஷின் 51வது படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன் போடப்பட்டு தற்போது படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது .

பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் இப்படத்தில் தனுஷுடன் நடிகர் நாகார்ஜூனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

செல்வந்த புண்ணியஸ்தலான திருப்பதியில் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றதாக கூறப்படுகிறது.

திருப்பதி மலையின் அடிவாரத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் அதற்காக அப்பகுதியில் போக்குவரத்து வேறு பாதைக்கு மாற்றப்பட்டு இருந்தது.

இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும் இதுகுறித்து புகார்கள் எழுததாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

அந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வந்ததால் அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் வரவழைக்கப்பட்டு செம கடுப்பில் இருந்த பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து பக்தர்கள் கேட்டுக்கொண்டபடி பழைய பாதையிலேயே அனுமதித்து சாமி தரிசனம் செய்ய அனுப்பினார் .

படப்பிடிப்பு ஆரம்பத்திலேயே படக்குழுவுக்கு இப்படி ஒரு சிக்கல் வந்ததால் யாருக்கும் இடையூறு இன்றி படப்பிடிப்பை நடத்துமாறு படக்குழுவிடம் தனுஷ் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இதுதான் செல்லம்மா திட்றதா : ‘கண்டனம்’ என்ற வார்த்தை இன்றி பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த EPS..!!!

More in Cinema News

To Top