Connect with us

போறபோக்கில் கேஸ் போட்ட சமூக ஆர்வலர் – சர்ச்சையில் சிக்கிய விக்ரமின் ‘வீர தீர சூரன்’ திரைப்படம்..!!

Cinema News

போறபோக்கில் கேஸ் போட்ட சமூக ஆர்வலர் – சர்ச்சையில் சிக்கிய விக்ரமின் ‘வீர தீர சூரன்’ திரைப்படம்..!!

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்திற்கு தற்போது புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சீயான் விக்ரம் . இவரது நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாக உள்ள திரைப்படம் தான் ‘சீயான் 62’ .

இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ‘சீயான்’ விக்ரமுடன் சேர்ந்து , துஷார விஜயன் , எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர் .

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படத்தின் டைட்டில் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது .

அதன்படி வீர தீர சூரன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு தற்போது புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது.

இந்த படத்தின் டீசரில் விக்ரம் கத்தி மற்றும் அருவாள் உடன் இருப்பது போன்ற போஸ்டர் வெளியாகி பார்க்கவே செம கோரமாக இருந்தது .

இந்நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர், படத்தின் போஸ்டருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், சமீபகாலமாக இளைஞர்கள் கத்தியை வைத்து கேக் வெட்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி இருக்கும் சூழலில் விக்ரம் நடிக்கும் இந்த படத்தில் இரண்டு கையில் கத்தி வைத்துள்ள போஸ்டர் மற்றும் வீடியோக்களை இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இது இன்றைய தலைமுறைகளை நிச்சயம் பாதிக்கும் இளசுகளுக்கு நல்லதை சொல்லவில்லை என்றாலும் தீயதாகி காட்டாமல் இருப்பது நம் அனைவரின் கடமை . எனவே படக்குழு மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெங்களூரு அணியிடம் ஆல் அவுட்டான குஜராத் - RCB அணிக்கு 148 ரன்கள் இலக்கு..!!!

More in Cinema News

To Top