Connect with us

விஜய்யை நம்பியா நாட்டை ஒப்படைப்பது? நடிகர் பிரகாஷ் ராஜ் ஓப்பன் டாக்..

Featured

விஜய்யை நம்பியா நாட்டை ஒப்படைப்பது? நடிகர் பிரகாஷ் ராஜ் ஓப்பன் டாக்..

தளபதி விஜய் தற்போது சினிமா வாழ்க்கையிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் தான் அவரது கட்சியின் இலக்கு என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் தளபதி விஜய்யின் அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பிரபல இயக்குநர். அவர் விஜய்யை ஸ்டார் ஆக்கியும், நிறைய படங்களும் இயக்கியவர். ஆனால், விஜய் அரசியலுக்கு புதியவர். நான் அறிந்தவரையில், அரசியலைப் பற்றி அவருடன் தீவிரமாக பேசவில்லை.

விஜய் தனது பிரபலத்தை பயன்படுத்தி அரசியலில் வருகிறார். அதேபோல் பவன் கல்யாணும் அதே நிலைமையில் தான் இருக்கிறார். அவர்களுக்கு நாட்டின் பிரச்சனைகள் குறித்து தெளிவான பார்வை இல்லை, புரிதலும் இல்லை. பவன் தனது கட்சியை துவங்கி பத்து வருடங்கள் கழித்து கூட தெளிவான நிலைபாடுகளை வகுக்கவில்லை.

விஜய் அல்லது பவன் கல்யாணோ தேர்தலில் சில இடங்களை பெறலாம். ஆனால், அதற்கு பிறகு அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும். விஜய் பேசும் போது, அது வசனங்களை கேட்பதுபோல் தான் இருக்கிறது. அவருக்கு ஆழமான புரிதலே இல்லை. இவரை நம்பி, இந்த நாட்டின் தலைவிதியை ஒப்படைப்பது எப்படி?” என்று அவர் பேசியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தலைவருடன் படம் பண்ணு!" – லோகேஷிடம் முதல் நபராக கூறிய தளபதி விஜய்..

More in Featured

To Top