திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த திருவிழாவை சிறப்பாக நடத்த சிறப்பு ஏற்பாடுகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது .
தமிழ்நாடு அரசும் திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது . இந்நிலையில் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக நடைபெறும் சிறப்பு ஏற்பாடுகளின் விவரம் வெளியாகி உள்ளது.
சிறப்பு ஏற்பாடுகளின் முழு விவரம் :
அதிகாலை 3:30 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. கோயிலுக்குள் 3,000 – 4,000 பக்தர்களுக்கு அனுமதி
மாலை 6:00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. கோயிலுக்குள் 6,000 – 7,000 பக்தர்களுக்கு அனுமதி 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
May I Help You என்ற 50 உதவி மையங்கள் அமைப்பு!
தமிழ்நாடு அரசு சார்பில் 2,700 சிறப்பு பேருந்துகளும், புறவழிச்சாலையிலிருந்து 100 பேருந்துகளும் இயக்கம்!
முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு மட்டுமே மலை ஏற அனுமதி. 14,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது ஆயிரக்கணக்கான பக்கதர்களின் முழக்கத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது....