Connect with us

‘பிரம்மயுகம்’ படத்தில் ஹீரோவும் இல்லை வில்லனும் இல்லை – மம்மூட்டி சொன்ன ஷாக்கிங் தகவல்

Cinema News

‘பிரம்மயுகம்’ படத்தில் ஹீரோவும் இல்லை வில்லனும் இல்லை – மம்மூட்டி சொன்ன ஷாக்கிங் தகவல்

நடிகர் மம்மூட்டியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி உள்ள ‘பிரம்மயுகம்’ படம் குறித்து ஒரு சூப்பரான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது .

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் மம்மூட்டியின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படமே ‘பிரம்மயுகம்’.

ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய்நாட் ஸ்டுடியோஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து உள்ளது .

கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான இப்படத்தின் முதல் தோற்றமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த சில நாட்களிலேயே படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் தாறுமாறான வரவேற்பை பெற்றது .

அன்று முதல் இப்படத்தை காண ரசிகர்கள் செம ஆவலாக இருக்கும் நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க செய்தது.

இப்படம் வரும் பிப்.15 ஆம் தேதி தமிழ் உளப்பட பல மொழிகளில் உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை மாமூட்டி சொல்லியுள்ளார்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் லந்துகொண்டு பேசிய நடிகர் மம்மூட்டி கூறியதாவது :

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் ஹீரோ, வில்லன்கள் இருக்கலாம். ஆனால், இந்தப் படத்தில் அப்படி யாரும் இல்லை. காரணம், எதிர்மறையான குணாதியசங்களைக் கொண்டவர்கள், வில்லன்களாக சித்தரிக்கப்படாத காலக்கட்டம் என்பதால் ஹீரோ – வில்லன்கள் படத்தில் இல்லை.

என்னுடைய கதாபாத்திரம் பல்வேறு அடுக்குகளைக் கொண்ட மர்மம் நிறைந்த கதாபாத்திரமாக இருக்கும். அது குறித்து நிறைய சொல்ல விரும்பவில்லை, ஏனென்றால் அது பார்வையாளர்களின் திரையனுபவத்தை பாதிக்கும் என நடிகர் மம்மூட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  12 ஆண்டுகளுக்கு பின் ஜெய்ப்பூரில் ராஜஸ்தானை வெல்லுமா மும்பை - டாஸ் வென்ற MI பேட்டிங் செய்ய முடிவு..!!!

More in Cinema News

To Top