Connect with us

தனி ஒருவன் 2 எப்போ? இயக்குநர் மோகன் ராஜா மற்றும் அர்ச்சனா கொடுத்த நேரடி அப்டேட்!

Featured

தனி ஒருவன் 2 எப்போ? இயக்குநர் மோகன் ராஜா மற்றும் அர்ச்சனா கொடுத்த நேரடி அப்டேட்!

தமிழ் சினிமாவின் கிளாசிக் திரில்லராக வாழும் படம் தனி ஒருவன். 2015-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்கியிருந்தார். ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடித்த இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த வெற்றிக்கு பிறகு, தனி ஒருவன் 2 குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. 2023-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தாலும், இதுவரை படப்பிடிப்பு துவங்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற விழாவில், இயக்குநர் மோகன் ராஜாவும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் கலந்து கொண்டனர். அப்போது தனி ஒருவன் 2 குறித்த கேள்விக்கு அவர்கள் பதிலளித்தனர்.

மோகன் ராஜா கூறினார்:
“தனி ஒருவன் 2 நமக்கு ஸ்பெஷல் படம். எல்லாமே ரெடியா இருக்கு. தயாரிப்பு நிறுவனம் சரியான நேரம் சொல்றோம் தான் என்கிறாங்க.”

அர்ச்சனா கல்பாத்தி கூறியதாவது:
“நான் பெற்ற முதல் விருது தான் தனி ஒருவன் படத்திற்கானது. இரண்டாம் பாகம் மிகப்பெரிய படம். அதனால சரியான நேரம் பார்த்து துவங்கவிருக்கிறோம். ரவி, நயன் இருவரும் படத்தில் இருக்காங்க. ஸ்கிரிப்ட் பயங்கரமாக இருக்கு.” அப்படியானால், தனி ஒருவன் 2 விரைவில் ஆரம்பமாகும் என உறுதி. ரசிகர்களுக்காக ஒரு மாஸ் ரீஎண்ட்ரி காத்திருக்கிறது!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அந்த விஷயத்தால் என் கணவர் 10 நாள் என் பக்கத்தில் கூட வரவில்லை – நடிகை கீர்த்தி சுரேஷ் சுவாரஸ்ய பகிர்வு..

More in Featured

To Top