Connect with us

தமிழ் சினிமாவில் ஜாதி பார்க்கிறார்கள்…நடிகர் கலையரசனின் அதிர்ச்சி புகார்!

Featured

தமிழ் சினிமாவில் ஜாதி பார்க்கிறார்கள்…நடிகர் கலையரசனின் அதிர்ச்சி புகார்!

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, சார்ப்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளவர் நடிகர் கலையரசன். பல்வேறு பேட்டிகளில் பேசும் போதும், இயக்குநர் பா. ரஞ்சித்துடன் தன் நெருக்கத்தைப் பற்றியும், “நான் எதை செய்தாலும் இயக்குநர் ரஞ்சித்திடம் ஆலோசித்து தான் செய்கிறேன்” என்றும் கலையரசன் கூறியிருந்தார்.

இந்நிலையில், கலையரசன் நடித்துள்ள புதிய திரைப்படமான ‘ட்ரெண்டிங்’ திரைப்படத்தின் விழா நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது அவர் தனது உரையில், தமிழ் சினிமாவில் நிலவும் சமூக அமைப்புகளைக் குறித்து பேசினார்.

“தமிழ் சினிமாவில் ஜாதி இல்லை என சிலர் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அது மிகவும் மோசமான நிலைக்குள் சென்றுவிட்டது. நான் இயக்குநர் பா. ரஞ்சித்துடன் நெருக்கமாக இருப்பதால், பலரும் என்னை நடிக்க அழைக்க தயங்குகிறார்கள். எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன,” என அவர் கூறினார். அவரது இந்தக் கருத்துக்கள் தற்போது சினிமா உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “அரசன் ஷூட்டிங் தொடக்கம்! 🎬🔥 STR–வெற்றிமாறன் மீண்டும் அதிரடி”

More in Featured

To Top