Connect with us

தென்னிந்திய தயாரிப்பாளர்களால் வந்த பாலியல் தொல்லை – பிரபல நடிகை ஓப்பன் டாக்

Cinema News

தென்னிந்திய தயாரிப்பாளர்களால் வந்த பாலியல் தொல்லை – பிரபல நடிகை ஓப்பன் டாக்

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை அங்கிதா திரைப்பட தயாரிப்பாளர்களால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

வடக்கில் என்னதான் பெரிய நடிகையாக வலம் வந்தாலும் அவரது ஆரம்ப காலம் அவ்வளவு எளிமையாக இல்லை என்பது அவர் அளித்த பேட்டியின் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

காலப்போக்கில் சினிமாவின் பெயர் படிப்படியாக வளர்ந்து வந்தாலும் மறுபக்கம் அதே சினிமாவின் கருப்பு பக்கம் மெல்ல மெல்ல எட்டி பார்க்கத்தான் செய்கிறது .

அதுவும் சினிமாவில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகள் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையே திருப்பிப்போட்டு விடுகிறது .

அந்தவகையில் தற்போது தனக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து நடிகை அங்கிதா கூறிருப்பதாவது :

தென்னிந்திய தயாரிப்பாளர்கள் எனக்கு வாய்ப்பளிப்பதாக கூறி ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு வர சொல்கிறார்கள். வந்த உடனேயே எனக்கான சம்பளத்தை பேசிவிட்டு எனது தோளில் கை போடுகிறார்கள்.

நான் படத்தில் நடிப்பதற்குதான் சம்பளம் வாங்குகிறேனே தவிர உங்களோடு படுப்பதற்கு கிடையாது என்று நான் கூறினால் என்னை படத்தில் இருந்து நீக்கி விடுவதாக கூறிவிடுகிறார்கள்.

இப்படி ஒரு தயாரிப்பாளர் இல்லை ஐந்து ஆறு தயாரிப்பாளர்கள் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார்கள்.

இவர்களை போன்ற மனிதர்களால் எனக்கு சினிமாவில் நடிப்பதற்கான ஆசையே போய்விட்டது என்று வேதனையுடன் கூறி இருக்கிறார் அங்கிதா.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அசுர பலம் வாய்ந்த ஹைதராபாத் அணியை அசால்டாக வீழ்த்தியது பெங்களூரு அணி..!!!

More in Cinema News

To Top