Connect with us

என் கணவரின் இறுதி பயணத்தை சிறப்பாக நடத்திக்கொடுத்த தமிழக அரசுக்கு ராயல் சலூட் – பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்

Cinema News

என் கணவரின் இறுதி பயணத்தை சிறப்பாக நடத்திக்கொடுத்த தமிழக அரசுக்கு ராயல் சலூட் – பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்

என் கணவரின் இறுதி பயணத்தை சிறப்பாக நடத்திக்கொடுத்த தமிழக அரசுக்கும் காவல்துறையினருக்கும் மிக்க நன்றி உங்களுக்கு ராயல் சலூட் என மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த்திற்கு நுரையீரல் அழற்சி காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை உயிரிழந்தார்.

சினிமா அரசியல் என இரண்டிலும் முடிசூடா மன்னனாக வலம் வந்த கேப்டன் விஜயகாந்தின் மரண செய்தி கேட்டு தமிழகமே சோக கடலில் மூழ்கியுள்ளது.அவரது உடலுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர் .

இதையடுத்து இன்று மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது :

தேமுதிக தொண்டர்கள், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்; விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் சிறந்த முறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

2 நாட்களில் 15 லட்சம் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். விஜயகாந்த் கையில் அணிந்திருந்த எங்கள் கட்சியின் மோதிரத்தோடு அவரை அடக்கம் செய்துள்ளோம். விஜயகாந்தின் கனவை நிச்சயம் வெற்றி பெற செய்வோம்.

என் கணவரின் இறுதி பயணத்தை சிறப்பாக நடத்திக்கொடுத்த தமிழக அரசுக்கும் காவல்துறையினருக்கும் மிக்க நன்றி உங்களுக்கு ராயல் சலூட் என பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டெல்லியின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா கொல்கத்தா..? ஈடன் கார்டனில் இன்று பலப்பரீட்சை..!!

More in Cinema News

To Top