Connect with us

போலியான வருத்தத்தை நாங்கள் கேட்கவில்லை..சசிகுமாரின் ட்வீட் வைரல்!

Cinema News

போலியான வருத்தத்தை நாங்கள் கேட்கவில்லை..சசிகுமாரின் ட்வீட் வைரல்!

பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக அமீர் – ஞானவேல் இடையே மோதல் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…பலரும் பல கருத்துகளை சொல்லி வருகின்றனர்…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் அமீருக்கு எதிராக பல கருத்துக்களை முன் வைத்து இருந்தார் ஞானவேல் ராஜா. இவரது பேச்சுக்கு பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்…பலரும் மன்னிப்பு கேட்கவும் சொல்லி வந்தனர்….

இந்நிலையில் ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்..அதில் அவர் என் மீது அமீர் சுமத்திய பொய்யான குற்றச்சாற்றுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது..அது எனக்கு வருத்தத்தை கொடுத்தது..அதற்கு பதில் அளிக்கும் போது அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவித்து இருந்தார்…இதில் மன்னிப்பே இல்லையே என பலரும் விமர்சனம் தெரிவித்தனர்…

இந்நிலையில் இதற்கு பதில் அளித்த சசி குமார் போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது…அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன அப்படி என்ன சொல்லி இருந்தார்…

நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால் என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல் ராஜா அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன…திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்னமாதிரியான வருத்தம்…இதில் எந்தவித நியாயம் இருக்கின்றது…

இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு என்று சசி குமார் பதிவிட்டு உள்ளார்…அவரின் பெயரையும் அவர் சொல்லியதையும் சொல்லி கேட்டால் தானே சரி என சசிகுமார் சொல்வது போல அந்த ட்வீட் இருக்கின்றது…இப்போது இந்த ட்வீட் வைரல் ஆகி இருக்கின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஏற்காடு பேருந்து விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top