Connect with us

பணிப்பெண் சித்ரவதை – பல்லாவரம் எம்.எல்.ஏ-வின் மகன், மருமகள் கைது..!!

Featured

பணிப்பெண் சித்ரவதை – பல்லாவரம் எம்.எல்.ஏ-வின் மகன், மருமகள் கைது..!!

குடும்ப கஷ்டம் காரணமாக வீட்டு வேலைக்கு வந்த பணிப்பெண் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் மற்றும் மருமகள் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கொத்தடிமை போல நடத்தி, அவரை தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளனர்.

தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்ணீர்மல்கக் கூறும் அப்பெண்ணின் காணொளியைப் பார்த்தாலே நெஞ்சம் பதைபதைக்கிறது. அப்பெண்ணுக்கு நடந்தேறிய மனிதவதையை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

குடும்ப கஷ்டத்திற்காக வீட்டு வேலைக்கு வந்த இளம்பெண்ணை இரவு பகலென்றும் பாராது ஓய்வில்லாத வகையில் கடுமையான வேலைகளைக் கொடுத்து நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்குக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வீட்டு வேலைக்காக வந்த பணிப்பெண் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது .

இதையடுத்து ஆந்திராவில் தலைமறைவாக இருந்த மகன் ஆண்டோ, மருமகள் மர்லினா ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர் .

வேற்று மாநிலத்தில் கைது செய்த அவர்களை தற்போது சென்னை அழைத்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் இயக்குநர் நெல்சன்..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top