Connect with us

மறுபடியும் முதல இருந்தா : சீனாவில் வேகமாகப் பரவும் மர்ம காய்ச்சலால் பீதியில் உலக மக்கள்

Featured

மறுபடியும் முதல இருந்தா : சீனாவில் வேகமாகப் பரவும் மர்ம காய்ச்சலால் பீதியில் உலக மக்கள்

சீனாவில் தற்போது வேகமாகப் பரவி வரும் மர்ம காய்ச்சலால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரும் தற்போது பீதியில் உறைந்துள்ளனர்.

உலக மக்கள் அனைவரையும் கடந்த 4 வருடங்களாக படாதபாடு படுத்திய கொடிய வைரஸ் நோய் கொரோனா.சீனாவை பிறப்பிடமான கொண்ட இந்த வைரஸ் தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டில் உள்ள உகான் மாகாணத்தில் இருந்து பரவ தொடங்கியது.

அங்கிருந்து மெல்ல மெல்ல மற்ற நாடுகளுக்கு பரவிய இந்த நோய் உலக முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தியது மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான உயிர்களை கொன்று குவித்தது எங்கு பார்த்தாலும் அழுகை குரல்களும் பிணங்களுமாக இருந்த அந்த காட்சிகளை இன்று வரை யாராலும் மறக்க முடியாது.

இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து ஓரளவு மீண்டு வரும் நேரத்தில் தற்போது சீன நாட்டில் மர்ம காய்ச்சல் ஒன்று வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கொரோனா பேரிடருக்குப் பிறகு தற்போது மர்ம காய்ச்சல் மிகவேகமாக பரவுவதாக தகவல். பீஜிங், லியானிங் மாகாணங்களில் காய்ச்சல் பாதித்த குழந்தைகளால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பியுள்ளதாக வெளி வரும் செய்தார்கள் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சீன மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரும் மரண பீதியில் உள்ளதால் உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த காய்ச்சல் குறித்த விபரங்கள் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை சமர்ப்பிக்குமாறு சீன அரசிடம் கேட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஈடன் கார்டனில் இன்று வெற்றிநடை போடப்போவது யார்..? கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்..!!

More in Featured

To Top