Connect with us

விசாரணை முடிந்து வந்த மன்சூர் அலிகானை கேட்ட கேள்விகள்…கையெடுத்து கும்பிட்டு கிளம்பி மீண்டும் சர்ச்சை!

Cinema News

விசாரணை முடிந்து வந்த மன்சூர் அலிகானை கேட்ட கேள்விகள்…கையெடுத்து கும்பிட்டு கிளம்பி மீண்டும் சர்ச்சை!

இப்போது அதிகமாக பேசப்பட்டு வருவது மன்சூர் பேசிய விஷயம் தான்,நேற்று முன்தினம் நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து மிகவும் மோசமான வகையில் பேசினார். இந்த விஷயம் வைரலாகி பின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…அனைவரும் இதனை மோசமாக விமர்சித்து இருந்தனர் இவரின் இந்த செயலுக்கு கேஸ் கூட கொடுக்கப்படும் என சொல்லப்பட்டது…அதனை போல பல தரப்பில் வழக்கு கொடுத்து இன்று விசாரணை கூட நடந்தது..

அவர் பேசியது நடிகை திரிஷாவிற்கு கவனத்திற்கு செல்ல மன்சூர் அலிகானை வன்மையாக கண்டித்து அவர் பதிவு ஒன்றை வெளியிட்டார்…இதன்பின் லோகேஷ் கனகராஜ்,கார்த்திக் சுப்ராஜ், சின்மயி, குஷ்பூ, சாந்தனு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் மன்சூர் அலிகானுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்…இவருக்கு எல்லாம் கருணை தரக்கூடாது அவரை மன்னிக்கவும் கூடாது..ஒரு கேவலவாதி இவர் என பல தரப்பில் இருந்து விமர்சனம் வந்தது..

மேலும் நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர் இதில் நடிகர் மன்சூர் அலிகான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.ஆனால் மன்சூர் அலிகான் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை…அவர் என்ன முடிவில் இருக்கின்றார் என இதுவரை அவர் சொல்லவும் இல்லை..இதனால் வழக்கு கோர்ட் வரை சென்று இன்று ஆஜர் ஆகி இருந்தார் மன்சூர் அலி கான்..

இந்நிலையில் அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலும் சொல்லி இருந்தார் அதாவது பத்திரிகையாளர்கள் கேள்விகளை எழுப்பிய போதும் திரிஷாவை நடிகையாக மிகவும் மதிக்கிறேன் என்று சொல்லிவிட்டு நீங்கள் செய்ததற்கு தான் இங்கே வந்து நிற்கிறேன்…உங்களால் தான் எனக்கு இப்படி ஒரு நிலை என கும்பிட்டு விட்டு சென்று இருக்கின்றார் மன்சூர் அலி கான்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தும் அரண்மனை 4 - இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

More in Cinema News

To Top