Connect with us

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு – தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு..!!

Featured

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு – தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு..!!

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் மக்களவை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளதாக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார் .

அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஏப்ரல் 19ல் மக்களவை தேர்தல் :

வேட்புமனு தாக்கல் தொடக்கம் : March 20
வேட்புமனு தாக்கல் கடைசி நாள் : March 27
வேட்புமனு பரிசீலனை : March 28
வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் : March 30
வாக்குப்பதிவு : April 19
வாக்கு எண்ணிக்கை : June 4

ஆந்திராவில் மே 13ம் தேதியும், ஓடிசாவில் மே 13, மே 20 & மே 25ம் தேதி என 3 கட்டமாகவும், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் ஏப்ரல் 19ம் தேதியும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தின் விளவங்கோடு தொகுதிக்கு ஏப்ரல் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஊழலை எதிர்த்து நின்றால் கைது செய்வீர்களா..? - கொதிக்கும் அன்புமணி

More in Featured

To Top