Connect with us

மனைவி மரணம்: தனிமரமான கவுண்டமணி, ஆறுதல் கூற முடியாமல் சத்யராஜ்!

Featured

மனைவி மரணம்: தனிமரமான கவுண்டமணி, ஆறுதல் கூற முடியாமல் சத்யராஜ்!

நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு பேரிழப்பு. அவரது மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 10.30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 67.

இந்த துயரச் செய்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சத்யராஜ் முதலாளாக தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் இல்லத்துக்கு சென்று நேரில் ஆறுதல் கூறினார். முகத்தில் ஆழ்ந்த சோகம், கண்களில் கண்ணீர், சொல்களில் வேதனை. சத்யராஜ் சொல்வதற்கே வார்த்தைகள் இல்லாமல் நின்றார்.

நிறைய திரை பிரபலங்கள் இணையதளத்திலும் சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கவுண்டமணி தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னன்.
1939-ல் பொள்ளாச்சியில் பிறந்த இவர், 1970-ம் ஆண்டு “ராமன் எந்தன் ராமனடி” படத்தில் அறிமுகமானார்.

பின்னர் செந்திலுடன் இணைந்து தமிழில் எவர்கிரீன் காமெடி தரும் ஜோடியாக வளர்ந்தார். “கரகாட்டக்காரன்”, “வாழைப்பழ காமெடி”, “சொப்பன சுந்தரி” காட்சி போன்றவை இன்றும் ரசிகர்களை கவர்கின்றன. தற்போது தனது வாழ்க்கை துணையை இழந்து வலியில் உள்ளார். மூத்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு நாங்களும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்: தக் லைஃப் பற்றி கமல் ஹாசன் முக்கிய அறிவிப்பு!

More in Featured

To Top