Connect with us

ராமாயணத்தில் சீதையாக நடிக்கவில்லை: யாஷ் தான் காரணம் என்று கூறிய கே.ஜி.எப் நடிகை..

Featured

ராமாயணத்தில் சீதையாக நடிக்கவில்லை: யாஷ் தான் காரணம் என்று கூறிய கே.ஜி.எப் நடிகை..

பிரஷாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடித்த கே.ஜி.எப் திரைப்படம் உலகளவில் வெளியாயிற்று. இந்தப் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. தமிழில், விக்ரம் நடித்த ‘கோப்ரா’ படத்தின் மூலம் அவர் அறிமுகமானார். கே.ஜி.எப் படத்தின் வெற்றிக்கு பிறகு, சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி விட்டார்.

தற்போது, நானியுடன் ‘ஹிட் 3’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்த படம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஸ்ரீநிதி பேசிய விஷயம் தற்போது பேசப்படும் விஷயமாகியுள்ளது.

“ராமாயணத்தில் சீதை வேடத்திற்கு நான் தான் முதலில் ஆடிஷனில் கலந்து கொண்டேன். தயாரிப்பாளர்களுக்கும் என் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், கே.ஜி.எப் படத்தில் எனக்கு ஜோடியாக நடித்த யாஷ், இந்தப் படத்தில் ராவணனாக நடிக்கிறார். அதனால், அந்த படத்தில் நடிக்க நான் மறுத்துவிட்டேன்.”

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திருநங்கை அழகிப்போட்டியில் மயங்கி விழுந்த நடிகர் விஷால்!

More in Featured

To Top