Connect with us

உலக அரங்கில் கெத்து காட்ட காத்திருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ – உற்சாக வெள்ளத்தில் மூழ்கிய படக்குழு..!!

Cinema News

உலக அரங்கில் கெத்து காட்ட காத்திருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ – உற்சாக வெள்ளத்தில் மூழ்கிய படக்குழு..!!

திரையரங்குகளில் சக்கை போடு போட்ட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தற்போது உலக அரங்கில் கெத்து காட்ட உள்ளதாக மகிழ்ச்சியூட்டும் தகவல் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் , சித்தார்த் ,மற்றும் பாபி சிம்ஹா நடிப்பில் உருவான ஜிகர்தண்டா திரைப்படம் சூப்பர் டூப்பர் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது . புத்தம் புதிய கதை களத்துடன் திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமான “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.

ராகவா லாரன்ஸ் , எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் பிரமிக்க வைக்கும் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது . ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்திற்கு எவ்ளோ வரவேற்பு கிடைத்ததோ அதை விட பல மடங்கு அதிகமாக இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததா; வருவதால் படக்குழு மொத்தமும் சந்தோச பெருவெள்ளத்தில் உள்ளது.

போட்டதை அள்ளும் படங்களுக்கு மத்தியில் போட்டதை விட பல மடங்கு வசூல் ஈட்டிய இப்படம் தற்போது மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் புகழ் வாய்ந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவின் கீழ் திரையிடப்பட உள்ளதாக IFFR அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுநாள் வரை திரையரங்குகளில் சக்கை போடு போட்ட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தற்போது உலக அரங்கில் கெத்து காட்ட போகும் செய்தி ரசிகர்கள் மற்றும் படக்குழு மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வாடிவாசலில் சூர்யாவுக்கு வில்லனாகும் இயக்குநர் அமீர் - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!

More in Cinema News

To Top