Connect with us

தமிழகத்தில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு

Featured

தமிழகத்தில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 11 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு வருகிறது . இதற்கு காரணம் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் குற்ற சம்பவங்கள் தான் என பல கருத்துக்கள் இணையத்தில் உலா வருகிறது.

அந்தவகையில் தற்போது தமிழகத்தில் உள்ள 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

  • ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக நியமனம்
  • சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆக மகேஷ்வர் தயாள் நியமனம்
  • தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக அமரேஷ் புஜாரி நியமனம்
  • TANGEDCO நிறுவனத்தின் ஐ.ஜி. ஆக பிரமோத் குமார் நியமனம்
  • மகளிருக்கு எதிரான குற்றப்பிரிவின் ஐ.ஜி. ஆக தமிழ்சந்திரன் நியமனம்
  • சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு (தெற்கு) இணை ஆணையராக தர்மராஜன் நியமனம்
  • கோவை சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவின் எஸ்.பி. ஆக சந்திரசேகரன் நியமனம்
  • மதுரை மாநகர துணை ஆணையராக பாலாஜி நியமனம்
  • திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஆக பிரதீப் நியமனம்
  • சென்னை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் நியமனம்
  • கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. ஆக சமய் சிங் மீனா நியமனம்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை மடோனா செபாஸ்டியன் Glamour போட்டோஷூட்..

More in Featured

To Top